இந்தியா 75 (போர்முனை முதல் ஏர்முனை வரை) நூல் அரங்கம்

இந்தியா 75 (போர்முனை முதல் ஏர்முனை வரை) நூல் அரங்கம்

இந்தியா 75 (போர்முனை முதல் ஏர்முனை வரை) - மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு; பக். 144; ரூ.180; திசையெட்டு பதிப்பகம், சென்னை-39; 044-2597 6458.

'சந்திரயான், மங்கள்யான்' செயற்கைக்கோள் திட்டங்களால் அறியப்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.  அறிவியல் நூல்கள் பலவற்றை தமிழில் எழுதியுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு போர் விமான என்ஜின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இருவரும் இணைந்து எழுதிய அறிவியல் தமிழ் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெவ்வேறு இதழ்களிலும் வெளியானவை.

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பங்கள், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள்,  இவ்விரண்டால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள நன்மைகள், இளம் தலைமுறையினருக்கு உருவாகியுள்ள எதிர்கால வாய்ப்புகள் பற்றி 8 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கலாமின் இந்தியா 2020- ஓர் கனவா என்பது குறித்த ஓர் சிறப்புப் பார்வையும், 2030-க்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்த அறிவியல் மாணவர்களுக்கான கட்டுரையும் உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

அறிவியல் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது அதிசயப்பட வைக்கிறது. பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்துவதே தீர்வு என்பது சரியானதுதான். கரோனாவால் உலகமே பாதிக்கப்பட்ட நிலையில்,  டி.ஆர்.டி.ஓ.வும் களமாடிவருவதும், சாதனை படைத்துவருவதும் தொழில் துறைக்கு ஓர் முன்னேற்றமே!

அறிவியல் படிக்கும் மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புத நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com