பாடல் 2:
பழகும் தொண்டர் வம்
அழகன் அன்னியூர்
குழகன் சேவடி
தொழுது வாழ்மினே
விளக்கம்:
வம்=வம்மின், வாருங்கள்; பழகும்=சிவநெறியில் பழகும்; குழகன்=இளமையாக இருப்பவன்; ;
பொழிப்புரை:
இறைவன் பால் மனம் ஒன்றி சிவநெறியில் பழகும் தொண்டர்களே, அனைவரும் வருவீர்களாக. அழகும் இளமையும் இணைந்த அன்னியூர்ப் பெருமானின் சிறந்த திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.