பாடல் 10:
அலையாரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கியர்
தொலையாது அங்கு அலர் தூற்றத் தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்
தலையான நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே
விளக்கம்:
புனல்=நீர்நிலைகள்; பண்டைய நாளில் நீர்நிலைகளில் சென்று குளிப்பது வழக்கமாக இருந்தது போலும். தொலையாது=இடைவிடாது
பொழிப்புரை:
அலை வீசும் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்து அழுக்கு சேர்ந்த உடலும் பருத்த உடலும் கொண்டவர்களாக விளங்கிய சமணர்களும் சாக்கியர்களும் இடைவிடாது பழிச்சொற்கள் சொன்ன போதிலும் அதனை பொருட்படுத்தாது உமது அடியார்களுக்கு காட்சி தந்து ஆட்கொள்ளும் இறைவனே, நூல்களில் சிறந்ததாக கருதப்படும் வேதங்களை ஓதி உணர்ந்து தமது மனதினில் தரித்துள்ள அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் நிலையாக பொருந்தி உள்ள கோயிலைத் தனது இருப்பிடமாகக் கொண்டு நீர் எழுந்தருளி உள்ளீர்.