திணை அரிசியில் சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்..
தேவையானவை:
திணை அரிசி - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
திராட்சை, முந்திரி - 50 கிராம்
நெய் - 200 மில்லி
செய்முறை:
திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து, குழைய வேக விடவும்.
வெல்லத்தில் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, மண் இருந்தால் வடிகட்டவும்.
காய்ச்சிய பாகை வேகவைத்த பொங்கலில் ஊற்றவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க விட்டு மீதம் உள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- ராஜேஸ்வரி ரவிக்குமார்