தேசிய இளையோர் கூடைப்பந்து: தமிழ்நாடு, கேரள அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களின் முடிவில்,
கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் மோதிய தெலங்கானா - உத்தரகண்ட் அணிகள்.  (வலது) மகளிர் பிரிவில் விளையாடிய தமிழ்நாடு - கர
கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் மோதிய தெலங்கானா - உத்தரகண்ட் அணிகள்.  (வலது) மகளிர் பிரிவில் விளையாடிய தமிழ்நாடு - கர


கோவை: கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களின் முடிவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

 இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியவற்றின் சார்பில் இளையோர் தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் கடந்த 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. ஆடவர் பிரிவில் 25 மாநிலங்களின் அணிகளும், மகளிர் பிரிவில் 24 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. 

லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை 5-ஆவது நாள் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், கேரளம், தில்லி அணிகள் விளையாடின. இதில் கேரள அணி 70 - 40 என்ற புள்ளிகள் கணக்கில் தில்லியை வீழ்த்தியது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் இடையிலான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 68 - 56 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தெலங்கானா அணி 62 - 41 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரகண்ட் அணியை வீழ்த்தியது.

மகளிர் பிரிவு முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 68 - 31 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தெலங்கானா அணி 53 - 50 என்ற புள்ளிகள் கணக்கில் பிகாரை வீழ்த்தியது. மகாராஷ்டிர அணி 91 - 80 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரப் பிரதேசத்தை வீழ்த்தியது. அதேபோல் கர்நாடகத்தை எதிர்த்து ஆடிய தமிழ்நாடு அணி 52 - 36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

 இதற்கிடையே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் தமிழ்நாடு ஆடவர், மகளிர் பிரிவு அணிகள் வெற்றி பெற்றன. ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி 88 - 64 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி 86 - 68 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தியது. 

இதற்கிடையே லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆடவர் பிரிவில் ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம், தில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், சண்டீகர் ஆகிய 10 அணிகளும், மகளிர் பிரிவில் பஞ்சாப், கேரளம், ராஜஸ்தான், தில்லி, கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், சண்டீகர், ஹரியாணா ஆகிய அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்த போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து காலிறுதி போட்டிகள் மாலையில் தொடங்க உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com