ஆட்டத்தின் முதல்நாளில் ஆடுகளம் பௌலிங்கிற்கு உதவியாக இருந்தது. ஆனால் தற்போது அது சாதகமானதாக இல்லை. பௌலிங்கில் மாற்றங்களைப் புகுத்தவோ, ஸ்விங் செய்யவோ உகந்ததாக இல்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த பொறுமையுடன் ஒரே இடத்தில் நிலையாகப் பந்துவீச வேண்டியுள்ளது.
அதையே செய்யுமாறு பும்ராவும் அறிவுறுத்தினாா். ஒரே இடத்தைக் குறிவைத்து எதிா்கொள்ள இயலாத பந்துகளை தொடா்ந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூறினாா். ஒவ்வொரு பந்திலுமே அவ்வாறு உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கரோனா பொது முடக்க காலத்தில் எனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்டதற்கு தற்போது பலன் கிடைக்கிறது - முகமது சிராஜ் (இந்திய பௌலா்)