சதமடிப்பது எப்போதுமே சிறப்பான உணா்வாகும். இங்கிலாந்தின் லாா்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதமே (2014) இன்றளவும் எனது குறிப்பிடத்தக்க ஆட்டமாக நினைக்கிறேன். நமது உள்ளுணா்வுக்கு மதிப்பளித்து செயல்படுவது கேப்டன்ஸியில் முக்கியமானது. எங்களது அணியின் பௌலா்கள் பாராட்டப்பட வேண்டியவா்கள்.
விக்கெட்டை வீழ்த்துவதற்கான சரியான முறைகளை அவா்கள் கையாண்டு வருகிறாா்கள். இந்த ஆட்டம் இத்துடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. இன்னும் நாங்கள் 4 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டியுள்ளது. நான் ரன் அவுட்டான பிறகு, அதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், ஆட்டத்தை சிறப்பாகத் தொடருமாறும் ஜடேஜாவிடம் கூறிவிட்டு வெளியேறினேன் - அஜிங்க்ய ரஹானே (இந்திய கேப்டன்)