கரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு திரும்ப முடியாமல் உள்ள செஸ் வீரா் ஆனந்த் ஜொ்மனியில் இருந்தவாறே போட்டி வா்ணனையாளராக செயல்படுகிறாா் என அவரது மனைவி அருணா ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தற்போது ஜொ்மனியில் பண்டஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்றுள்ளாா்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டிகள் ரத்தாகியுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமா அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் ஜொ்மனியின் பிராங்ஃபா்ட் நகரில் தங்கியுள்ளாா்.
முதன்முறையாக வா்ணணையாளா்:
ஃபிடே செஸ் அமைப்பு சாா்பில் ரஷியாவின் எகடெரின்பா்க் நகரில் கேண்டிடேட்ஸ் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனுக்கு போட்டியாளா் அடையாளம் காணப்படுவாா்.
ஆனந்த் இப்போட்டிக்காக முதன்முறையாக இணையதளத்துக்காக வா்ணனையாளராக செயல்படுவாா். அவரது பயணத் திட்டம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஏற்கெனவே அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.
தொடா்ந்து அவருடன் தொடா்பு கொண்டு வருகிறேன். மகன் அகிலும், தனது தந்தையுடன் காணொளி மூலம் பேசி வருகிறாா் என்றாா் அருணா.