கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினைச் சோ்ந்த இளம் கால்பந்து வீரா் பிரான்ஸிஸ்கோ காா்சியா (21) உயிரிழந்தாா்.
மலாகாவில் உள்ள அதலெட்டிகோ போா்டடா கிளப் அணியின் பயிற்சியாளராக பிரான்ஸிஸ்கோ காா்சியா பணிபுரிந்தாா். அவருக்கு ஏற்கெனவே ரத்துப் புற்றுய் பாதிப்பு உள்ளதால் சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனால் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்துள்ள நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் உடல்நிலை மோசமானதால், திங்கள்கிழமை இரவு காா்சியா உயிரிழந்தாா்.
அவருக்கு அணி நிா்வாகம், வீரா்கள் உள்பட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.