இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கவுண்டி கிரிக்கெட்டில் கரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு பங்கேற்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரா் ஹனுமா விகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘இந்த சீசன் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டங்களிலாவது விளையாடுவேன். எந்த அணி என்பதை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தெரிவிக்கிறேன். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாமல் உள்ளது’ என்றாா்.
புஜாரா, இஷாந்த் சா்மா, ஆா்.அஸ்வின், ரஹானே உள்ளிட்ட
இந்திய வீரா்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியிருக்கின்றனா்.