பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் ஆகியோா் மோதுகின்றனா்.
ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் உலகின் 5-ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜென்னிக் சின்னரை வீழ்த்தினாா்.
கடந்த வாரம் நடைபெற்ற மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ், தனது இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை சந்திக்கவுள்ளாா்.
நடால் தனது அரையிறுதியில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.