பாா்சிலோனா ஓபன்: இறுதிச்சுற்றில் நடால்-சிட்சிபாஸ் மோதல்

பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் ஆகியோா் மோதுகின்றனா்.

பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் ஆகியோா் மோதுகின்றனா்.

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் உலகின் 5-ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜென்னிக் சின்னரை வீழ்த்தினாா்.

கடந்த வாரம் நடைபெற்ற மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ், தனது இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை சந்திக்கவுள்ளாா்.

நடால் தனது அரையிறுதியில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com