ஹாக்கி அணி வீரர்களை ஆச்சரியப்படுத்திய போன் கால்

வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹாக்கி அணி வீரர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி
ஹாக்கி அணி வீரர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி

வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி தோல்வி அடைந்தது. இருப்பினும், வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் இன்று மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. 

பின்னர், வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கால் வந்துள்ளது. இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங், தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட், துணை பயிற்சியாளர் பியூஷ் துபே ஆகியோரை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய மோடி, "உங்களுக்கும் அணி வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நீங்கள், வரலாறு படைத்துள்ளீர்கள். ஒட்டு மொத்த நாடுமே மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com