ஐசிசியின் ‘மாதத்தின் சிறந்த வீரா்’ விருது வென்றுள்ள இந்திய வீரா் ரிஷப் பந்த், அந்த விருதை, ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு சமா்ப்பணம் செய்வதாக தெரிவித்தாா்.
விருது கிடைப்பதற்காக தனக்கு வாக்களித்த ரசிகா்களுக்கு நன்றி கூறியுள்ளாா். இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடியதற்கான தனது ஊதியத்தை உத்தரகண்ட் பனிச்சரிவு பேரிடா் மீட்புப் பணிக்கு நன்கொடையாக பந்த் வழங்கவுள்ளாா்.