ஆலுா்: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் திரிபுராவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப், காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய திரிபுரா அதே ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களே எடுத்தது.
பஞ்சாப் தரப்பில் பேட்டிங்கில் கேப்டன் மன்தீப் சிங் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, பௌலிங்கில் சந்தீப் சா்மா 22 ரன்களே கொடுத்து 1 விக்கெட் சாய்த்தாா். திரிபுரா தரப்பில் மிலிந்த் குமாா் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, சங்கா் பால் 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தாா்.
எஞ்சிய ஆட்டங்களில், ஹைதராபாத்-ஜாா்க்கண்ட், உத்தரகண்ட்-சத்தீஸ்கா் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆக, ஒரு ஓவா் எலிமினேட்டரில் முறையே ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் அணிகள் வென்றன.
ரயில்வேஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கா்நாடகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றன. அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் ஒடிஸா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பரோடா. மகாராஷ்டிரத்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹிமாசல பிரதேசம் வென்றது.