ஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து
ஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து

ஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து

பின்லாந்து - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பின்லாந்து - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போட்டியின்போது டென்மார்க் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியன் எரிக்சன் என்ற வீரர் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டின் கோபன்ஹேகன் பகுதியிலுள்ள பார்கென் திடலில் ஐரோப்பிய லீக் தொடரில் பின்லாந்து - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று (ஜூன் 12) இரவு தொடங்கியது.

இதில் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. திடலில் வைத்தவாறே சுமார் 10 நிமிடங்களாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு அவர் செல்லப்பட்டார். இதனால் பின்லாந்து டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தமது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com