‘தொடர் தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி...’: நிகோலஸ் பூரன் கூறியது என்ன?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மே.இ.தீவுககள் அணி வெற்றி பெற்றது குறித்து அணியின் கேப்டன் மூச்சு விடுவது போலுள்ளது எனக்  கூறியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மே.இ.தீவுககள் அணி வெற்றி பெற்றது குறித்து அணியின் கேப்டன் மூச்சு விடுவது போலுள்ளது எனக்  கூறியுள்ளார். 


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றது. பிரண்டான் கிங் 68 ரன்களும் , ஓபட் மெக்காய் 6 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். 
5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 3வது டி20 போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. 

தொடர் தோல்விகளுக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றிருப்பது குறித்து அணியின் கேபடன் நிக்கோலஸ் பூரன் கூறியிருப்பதாவது: 

இந்த கோடைக்காலம் எங்களுக்கு கடினமானதாக இருந்தது. அதிகமான போட்டிகள் தோலிவியுற்றோம். ஒபட் அற்புதமான வீரர். ஆடுகளத்தினை நன்கு கணித்து பந்து வீசினார். டி20ஐ பொருத்தவரை நீண்ட நேரம் விளையாட வேண்டுமென நினைக்கிறேன். நானும் ஹெட்மயரும் அதிகமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கிங் ஆடிய விதம் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தது. இது அவருக்கும் இனிவரும் போட்டிகளுக்கு உதவும். தினேஷ் கார்த்திக் விளையாடும் போது ஸ்டம்பிற்கு நேராக பந்து வீச வேண்டுமென ஒபேத் கூறிக்கொண்டே இருந்தார். அது சரியாகவும் நடந்தேறியது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு கடைசியில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் தற்போது நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com