பும்ரா அபாரமான பந்துவீச்சு: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. 
பும்ரா அபாரமான பந்துவீச்சு: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நிலைகுலைய வைத்தார். 

ஜேசன் ராய், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ரன்னேதும் எடுக்காமல் பூச்சியத்திலே விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் 30 ரன்களை எடுத்தார். மொயின் அலி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 25.2 ஒவர்களுக்கு 110 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியாவின் சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் எடுத்தார். 

இரண்டாவது முறையாக இந்திய வீரர் பும்ரா ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் முதன்முறையாக ஒரு இந்திய பந்து வீச்சாளர் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் மிகக்குறைவான ஸ்கோர் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com