இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் திங்கள்கிழமை மாலை நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 348/8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 334/9 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. மே.இ.தீவுகளிடம் மோசமான முறையில் தோற்ற பாகிஸ்தான் அதில் இருந்து மீண்டும் வலுவான இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. முகமது ஹபீஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார்.