தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளலில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 227/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 230/4 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 2 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அள்ளினார். இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா பெறும் 3-ஆவது தொடர் தோல்வி இதுவாகும்.