உலகக் கோப்பை: அடுத்த இரு ஆட்டங்களில் இருந்து ஜேசன் ராய் விலகல்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய்க்குக் காயம் ஏற்பட்டது.
உலகக் கோப்பை: அடுத்த இரு ஆட்டங்களில் இருந்து ஜேசன் ராய் விலகல்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய்க்குக் காயம் ஏற்பட்டது.

ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்த ஜேசன் ராய், அடுத்த இரு ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஜேசன் ராய் இடம்பெறமாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம்பெறுவது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது. 

இங்கிலாந்து கேப்டன் மார்கனும் ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்தார். எனினும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறக்கூடும். 

சேசன் ராய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ், இங்கிலாந்து அணியிம் இடம்பெறவுள்ளார். மார்கனால் விளையாட முடியாமல் போனால் பட்லர் கேப்டன் பதவியை வகிப்பார். மொயின் அலிக்கு இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com