ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் இங்கிலாந்துக்குச் சென்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கிலாந்தில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு, செய்தியாளர்களிடம் உரையாடினார்கள். அந்த நிகழ்வின் புகைப்படங்கள்: