ராயுடுவின் 3டி கிண்டல்: விஜய் சங்கர் பதில்!

ட்விட்டரில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் விஜய் சங்கர்...
ராயுடுவின் 3டி கிண்டல்: விஜய் சங்கர் பதில்!

உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியில் சேர்க்கப்படாததால் வேதனையுடன் ட்விட்டரில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் விஜய் சங்கர்.

ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்பட்டி ராயுடுவால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறமுடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் (3 டைமன்ஷன் திறமை) ஆகிய மூன்றை அடிப்படையாக வைத்து விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இதற்கு விளக்கமளித்தார்.

தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு, உலகக் கோப்பை போட்டியைக் காண 3டி கண்ணாடியை வாங்கவுள்ளேன் என்று வேடிக்கையாகவும், அதே நேரம் வேதனையுடன் ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.

ராயுடுவுக்கு இதுவரை பதிலளிக்காமல் இருந்த விஜய் சங்கர், தற்போது அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: ஒரு கிரிக்கெட் வீரர் அணியில் தேர்வாகாமல் போகாமால் போனால் அந்த வேதனை எப்படியிருக்கும் என்பதை நான் அறிவேன். வீரரின் பக்கமிருந்து அதை நான் புரிந்துகொள்வேன். அவர் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதை அறிவேன். பெரிதாகச் சொல்லவேண்டுமென்று அவர் அந்த ட்வீட்டை வெளியிடவில்லை. அவருடைய சூழலை நான் புரிந்துகொள்வேன். எந்த கிரிக்கெட் வீரருக்கும் இது சரிதான் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com