சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹெத்மயர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை அணியில் பாப் டு பிளெஸ்ஸி, சாம் கரண், மொயீன் அலி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.