தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ்: சென்னை ஆடுகளம் பற்றி ரோஹித் சர்மா சொன்னது என்ன?

பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ்: சென்னை ஆடுகளம் பற்றி ரோஹித் சர்மா சொன்னது என்ன?

ஐபிஎல் 2021 போட்டியின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்து வென்றது. பெங்களூா் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பையைக் கட்டுப்படுத்த, அந்த அணியின் டி வில்லியா்ஸ் அதிரடியாக ஆடி வெற்றிக்கு வித்திட்டாா்.

ஆட்டம் முடிந்த பிறகு சென்னை ஆடுகளம் பற்றி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

முதல் ஆட்டத்தை வெல்வதை விடவும் ஐபிஎல் போட்டியை வெல்வதே முக்கியமானது. இந்த ஆட்டத்தில் கடுமையாகப் போராடினோம். சுலபமாக வெற்றியை அவர்களுக்குத் தரவில்லை. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். அது நடப்பதுதான். அதிலிருந்து அடுத்தக்கட்டத்துக்குச் செல்லவேண்டும். இந்த ஆடுகளத்தில் சுலபமாக ரன்கள் எடுக்க முடியாது. சில பந்துகள் ஆடுகளத்தின் தன்மை காரணமாக மெதுவாக வருகின்றன. அடுத்தமுறை இங்கு விளையாடும்போது இதை நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com