மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மிஸ்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியினால் சென்னை அணியைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தில்லி அணி. ஆர்சிபி அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.