கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தானில் மனன் வோராவுக்குப் பதில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஷ்ரேயஸ் கோபாலுக்குப் பதில் ஜெய்தேவ் உனத்கட்டும் களமிறங்குகின்றனர்.
கொல்கத்தாவில் கம்லேஷ் நாகர்கோடிக்குப் பதில் ஷிவம் மவி களமிறங்குகிறார்.