200-வது ஐபிஎல் ஆட்டத்தில் ரெய்னா

​மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் விளையாடும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் வரலாற்றில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 4-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் விளையாடும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் வரலாற்றில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 4-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 200 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். இந்த வரிசையில் சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து விராட் கோலி 199 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இதுவரை 199 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள ரெய்னா 5,489 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்தவர்கள் வரிசையில் ரெய்னா 2-வது இடத்தில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com