நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ருதுராஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார்.
இதன்மூலம், நடப்பு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ருதுராஜ்.
அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்: