மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்: பஞ்சாப் கிங்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. 
மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்: பஞ்சாப் கிங்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. 

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து, கேப்டன் விராத் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கோலி 24 பந்துகளில் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ்டியன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் நிலைத்து ஆடிய படிக்கல் 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com