கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.
2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
சிஎஸ்கே 16 முறையும் கேகேஆர் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல இந்த வருடம் இரு அணிகளும் விளையாடிய இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கே வென்றுள்ளது. அதனால் சிஎஸ்கே அணி மீண்டுமொருமுறை கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றவேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.