ராயுடு, தீபக் சஹார் காயங்களின் நிலவரம் என்ன?: சிஎஸ்கே பயிற்சியாளர்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அம்பட்டி ராயுடு, தீபக் சஹார் ஆகிய இரு வீரர்களின்....
ராயுடு, தீபக் சஹார் காயங்களின் நிலவரம் என்ன?: சிஎஸ்கே பயிற்சியாளர்


மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அம்பட்டி ராயுடு, தீபக் சஹார் ஆகிய இரு வீரர்களின் காயங்கள் பற்றிய நிலவரத்தை சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தோ்வு செய்தது. சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரா் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராயுடு பேட்டிங் செய்தபோது மில்ன் வீசிய பந்தினால் அவருடைய முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால்  நிலை தடுமாறி கீழே விழுந்த ராயுடு மேலும் விளையாட முடியாமல் ஓய்வறைக்குத் திரும்பினார். இதேபோல மும்பை இன்னிங்ஸில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடுத்த ஆட்டங்களில் விளையாடுவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

ராயுடுவின் எக்ஸ்ரேவில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. சிராய்ப்பு தான் ஏற்பட்டுள்ளது. எலும்புமுறிவு ஏற்பட்டிருக்குமோ என நாங்கள் பயந்தோம். தீபக் சஹாருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் பரிசோதித்து வருகிறோம். இருவரும் நலமுடன் விரைவில் திரும்பி வருவார்கள் என நம்புகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com