லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இதையும் படிக்க | ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் தெரியுமா?
லக்னௌ அணியும் டாஸ் வென்றிருந்தால், பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கும் என கேப்டன் ராகுல் விளக்கமளித்தார். அந்த அணியில் துஷ்மந்தா சமீராவுக்குப் பதில் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.