ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் லக்னெள அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 20வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற லக்னெள அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லர், படிக்கல் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
பட்லர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அதற்கு அடுத்து வந்த சாம்சன், டூசன் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து வந்த ஹிட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
எனினும் மறுபுறம் களமிறங்கிய அஷ்வின்(28), ரியான் பிராக்(8), ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. இதனால் லக்னெள அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.