பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படிக்க | இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணி சிஸ்கே: ஆய்வில் தகவல்
புணேவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பையில் மீண்டும் டைமல் மில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் மாற்றம் எதுவும் இல்லை என கேப்டன் மயங்க் அகர்வால் கூறினார்.