சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 29வது ஆட்டம் புணேவில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.