ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
ஐபிஎல்லின் நடப்புத் தொடரில் இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில், ராஜஸ்தான் அணி 4 வெற்றியும் 3 தோல்வியும், டெல்லி அணி 3 வெற்றியும் 3 தோல்வியும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.