குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டிரெண்டை மாற்றுவதற்காக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதாக அவர் கூறினார். அந்த அணியில் மஹிபால் லோம்ரோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் அணியில் யஷ் தயால் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோருக்குப் பதில் பிரதீப் சங்வான் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு இது 100-வது ஐபிஎல் ஆட்டம்.