ஐபிஎல் போட்டியில் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடலுடன் தனது கச்சேரியைத் தொடங்கினார்.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அதேபோன்று ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.
இதில் ஏ.ஆர். ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், பென்னி தயாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.