இந்த வருட ஐபிஎல் போட்டியில் பாண்டியா அற்புதமாக விளையாடி வருகிறார். 13 ஆட்டங்களில் 380 ரன்கள் எடுத்துள்ளார். 1 அரை சதம். 29 சிக்ஸர்கள். 12 விக்கெட்டுகள்.
இதையடுத்து ஒரு நிகழ்ச்சியில் பாண்டியாவை மிகவும் புகழ்ந்து பேசினார் யுவ்ராஜ் சிங். அவர் பேசியதாவது:
நான் நேற்று பாண்டியாவிடம் சொன்னேன், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுவதால் உலகக் கோப்பைப் போட்டி உனக்குச் சிறப்பாக அமையும் என்றேன்.
ஐபிஎல் போட்டியில் அற்புதமாக விளையாடி வருகிறார் பாண்டியா. இந்த ஃபார்மை அவர் உலகக்கோப்பைக்கும் நீட்டிக்கச் செய்வார் என நம்புகிறேன். உலகக் கோப்பைப் போட்டியில் அழுத்தமான தருணங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். பாண்டியா தற்போது பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அவருக்கு அற்புதமான உலகக் கோப்பைப் போட்டி அமையவுள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிராக 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் நான் பார்த்ததில் இதுவே சிறந்த ஆட்டம். நான்கு சிறந்த பந்துவீச்சாளர்களை அருமையாக எதிர்கொண்டதால் அவ்வாறு கூறுகிறேன் என்று பாராட்டியுள்ளார்.