மீண்டும் பொறுப்பில்லாமல் விளையாடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: இறுதிச்சுற்றில் மும்பை! (விடியோ)

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது...
மீண்டும் பொறுப்பில்லாமல் விளையாடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: இறுதிச்சுற்றில் மும்பை! (விடியோ)

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் சொதப்பியதுபோல இந்தமுறையும் சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ரசிகர்களை ஏமாற்றினார்கள். இந்தமுறையும் தோனி வந்துதான் அணியைக் காப்பாற்றி ஓரளவு ரன்கள் சேர்த்துக்கொடுத்தார். 

18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. 10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com