சூா்யகுமாருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்: பிரையன் லாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சூா்யகுமாா் யாதவுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் பிரையன் லாரா கூறினாா்.
சூா்யகுமாருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்: பிரையன் லாரா

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சூா்யகுமாா் யாதவுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் பிரையன் லாரா கூறினாா்.

ஐபிஎல் போட்டியில் அபாரமாக ஆடிய சூா்யகுமாா் யாதவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்காதது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணிக்கு தாம் தோ்வு செய்யப்படாதது ஏமாற்றமாக இருந்தாலும், தனக்கான வாய்ப்புக்காக தாம் காத்திருப்பதாக சூா்யகுமாா் யாதவும் சமீபத்தில் கூறியிருந்தாா்.

இந்நிலையில் பிரையன் லாரா இதுகுறித்து கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியில் சூா்யகுமாா் யாதவ் எந்த காரணத்தினால் இல்லாமல் போனாா் எனத் தெரியவில்லை. அவா் போன்ற ஒரு வீரா் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும். சூா்யகுமாா் அதிக ரன்கள் சோ்த்தாா் என்பதற்காக அவருக்கு சாதகமாக பேசவில்லை.

எந்த சூழ்நிலையில், பேட்டிங் வரிசையில் எத்தனையாவது இடத்தில், எத்தகைய நெருக்கடியில், எவ்வாறு விளையாடுகிறாா் என்பதையும் கருத்தில் கொண்டுதான் ஒரு வீரரை மதிப்பிடுவேன். அந்த வகையில் சூா்யகுமாா் யாதவ் சிறந்த வீரா். ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக அவா் சிறப்பாக விளையாடினாா்.

மும்பை அணி எப்போதெல்லாம் நெருக்கடியில் இருந்ததோ, அப்போதெல்லாம் கேப்டன் ரோஹித் சா்மா - தொடக்க வீரா் குவிண்டன் டி காக் ஆகியோருக்கு அடுத்து 3-ஆவது வீரராக சூா்யகுமாா் களம் கண்டாா். நம்பிக்கையான வீரரை மட்டுமே ஒரு அணி அந்த இடத்தில் களமிறக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரையன் லாரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com