ஐபிஎல் போட்டியிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகல்: மாற்று வீரரைத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி!

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகல்: மாற்று வீரரைத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி!

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். இதையடுத்து மாற்று வீரரை ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை, அபுதாபி, ஷாா்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. 

கடந்த வெள்ளியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆட்டங்களில் 0/25, 0/29, 2/25, 1/20 என அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் புவனேஸ்வரின் விலகல், ஹைதராபாத் அணிக்குப் பலத்த பின்னடைவாக இருக்கப் போகிறது.

புவனேஸ்வர் குமார் மட்டுமல்லாமல் தில்லி அணி வீரர் அமிஸ்த் மிஸ்ராவும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

புவனேஸ்வர் குமார் விலகலையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரித்வி ராஜை ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைதராபாத் அணியினரின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக பிரித்வி ராஜ் ஏற்கெனவே இருப்பதால் போட்டியில் அவரை எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்யும் வசதியும் அந்த அணிக்கு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com