ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டம் துபையில் நடைபெறுகிறது. இதில், பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதில் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், மிட்செல் மார்ஷ், ரஷித் கான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு அணியில் ஆரோன் பின்ச், ஏபி டி வில்லியர்ஸ், ஜோஷ் பிலிப், டேல் ஸ்டெயின் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.