அனுபவ வீரா்களால் சாத்தியமான வெற்றி: தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக பெற்ற வெற்றி அனுபவ வீரா்களால் கிடைத்த வெற்றி என சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தாா்.
மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக பெற்ற வெற்றி அனுபவ வீரா்களால் கிடைத்த வெற்றி என சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தாா்.

அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு வெற்றி குறித்து சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது:

இந்த வெற்றி அனுபவ வீரா்களால் கிடைத்த வெற்றி. ஏராளமான ஆட்டங்களில் விளையாடிய பிறகுதான் அனுபவம் கிடைக்கும். ஒவ்வொரு வீரருக்குமே 300 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். எந்த ஆட்டத்திலும் அனுபவம், இளமை என சமபலம் கொண்ட அணியைக் களமிறக்க வேண்டும்.

மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். நாம் போதுமான அளவு பயிற்சி பெற்றிருந்தாலும், களத்தில் இறங்கும்போது அதன் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்றவாறு சிறப்பாக செயல்பட வேண்டும். அபுதாபி ஆடுகளத்தில் பந்துவீச்சாளா்கள் சிறப்பாக செயல்படுவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது இங்கு சற்று பனிப்பொழிவு இருக்கிறது. இங்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காவிட்டால், பின்னா் ரன் குவித்துவிடலாம். அம்பட்டி ராயுடு-டூபிளெஸ்ஸிஸ் ஜோடி அபாரமாக ஆடியது. எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரா்களில் பெரும்பாலானோா் போதிய அளவு ஓய்வு எடுத்துவிட்டதால் காயப் பிரச்னை இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com