ஒலிம்பிக்: பரபரப்பான கட்டத்தில் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
ஒலிம்பிக்: பரபரப்பான கட்டத்தில் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி
ஒலிம்பிக்: பரபரப்பான கட்டத்தில் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளதால் போட்டி விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து 2 - 2  என்ற சமநிலையில் உள்ளன. 

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com