டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா காலிறுதிக்கு தகுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா, கொலம்பியாவின் வீரர் ஆஸ்கார் டிக்ரெரோஸை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியின் முடிவில் கொலம்பியாவின் ஆஸ்கார் டிக்ரெரோஸை 13-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.