இந்தியாவுக்கு மற்றொரு ஒலிம்பிக் பதக்கம் உறுதி: மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவிக்குமார் தாஹியா

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கு மற்றொரு ஒலிம்பிக் பதக்கம் உறுதி: மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவிக்குமார் தாஹியா

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் 23 வயது ரவிக்குமார் தாஹியா, கசகஸ்தானைச் சேர்ந்த  நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் கசகஸ்தான் வீரர் 9-2 என முன்னிலை பெற்றார். எனினும் பிறகு சிறப்பாக விளையாடி அதை 9-7 எனக் குறைத்தார் ரவிக்குமார் தாஹியா. காயமடைந்த நுரிஸ்லாம், புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தபோதும் ரவிக்குமாரின் ஆக்ரோஷ ஆட்டத்தால் இறுதியில் வீழ்ந்தார். 

அரையிறுதிச் சுற்றில் ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com