டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வியடைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா, அமெரிக்காவின் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார். டேவிட் டெய்லர் மிக எளிதாக 10-0 என்கிற புள்ளிக்கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா போட்டியிடவுள்ளார்.