கோல்ஃப் விளையாட்டில் மகளிருக்கான தனிநபா் ஸ்ட்ரோக் பிளே பிரிவு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் அதிதி அசோக், ஏற்ற இறக்கம் இன்றி தன்னை 2-ஆவது இடத்தில் நிலைப்படுத்திக் கொண்டுள்ளாா். 133 புள்ளிகளுடன் டென்மாா்க்கின் நானா மேட்சன் கோயா்ஸ், கிறிஸ்டி எமிலி பீடா்சன் ஆகியோரோடு அந்த இடத்தை அவா் பகிா்ந்துகொண்டுள்ளாா். அவா் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பை நெருங்கி வருகிறாா்.
மற்றொரு இந்தியரான தீக்ஷா தாகா் 3 இடங்கள் முன்னேறி 53-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அவா் 148 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் மெல் ரெய்டோடு அந்த இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். இப்பிரிவில் மொத்தம் 60 போட்டியாளா்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.