தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி: பிசிசிஐ

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி: பிசிசிஐ


டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி வென்ற மீராபாய் சானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ. 50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெண்கலம் வென்ற பிவி சிந்து, லவ்லினா மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ. 1.25 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. 

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இதுதொடர்பான அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com